கோலாலம்பூர்:
‘சிங்கப்பூர்-மலேசியா தலைவர்களின் சந்திப்புத் தொடரின் 10வது சந்திப்பு இன்றும் நாளையும் சிங்கப்பூரில் நடைப்பெற்று வருகிறது.
அதற்காக, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கின் அழைப்பின் பேரில் பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று முதல் இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு சிங்கப்பூர் சென்றுள்ளார்.
இந்தச் சந்திப்பு கோவிட்-19க்குப் பிறகு முதன்முதலாக இப்போதுதான் நடக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையில் அதிகரித்து வரும் ஒத்துழைப்பை மதிப்பிட்டுப் பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பாக இந்தச் சந்திப்பு திகழ்கிறது என சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சு ஞாயிற்றுக்கிழமை அறிக்கையில் தெரிவித்தது.
மேலும் மலேசியாவின் நிதி அமைச்சருமான அன்வார், நாளை திங்கட்கிழமை சிங்கப்பூரின் அதிபர் தர்மன் சண்முகரத்னத்தைச் சந்திப்பார் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது.