நவம்பர் 1 முதல் கோழி இறைச்சிக்கான மானியங்களும் விலைக் கட்டுப்பாடுகளும் நிறுத்தப்படும் – டத்தோஸ்ரீ முகமட் சாபு

கோலாலம்பூர்:

ரும் நவம்பர் 1 முதல் கோழி இறைச்சிக்கான மானியங்களும் விலைக் கட்டுப்பாடுகளும் நிறுத்தப்படும் என்று டத்தோஸ்ரீ முகமட் சாபு தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தரம் A , B மற்றும் C முட்டைகளுக்கான மானியம் தற்போதுள்ள வழிமுறையின்படி தொடரும் என்று வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சரான அவர் கூறினார்.

“கட்டம் கட்டங்களாக மானியங்களை மறுசீரமைக்கும் அணுகுமுறைக்கு ஏற்ப, நவம்பர் 1 முதல் கோழிக்கான மானியங்கள் மற்றும் விலைக் கட்டுப்பாடுகள் முழுமையாக நிறுத்தப்படும் என்று அரசாங்கம் முன்னர் அறிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது “கோழிக்கான மானியங்களை மொத்தமாக நிறுத்துவதற்கான காரணம், மானியங்களின் கசிவைக் குறைப்பதை நோக்காக கொண்டுள்ளது, ஏனெனில் இந்த சலுகைகளை வெளிநாட்டினர் மற்றும் அதிக வருமானம் கொண்டவர்களும் அனுபவிக்கிறார்கள்,” என்று அவர் இன்று திங்கட்கிழமை (அக் 30) நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here