ஈப்போ:
கோலா கங்சாரில் உள்ள ஒரு பள்ளியின் விடுதியில் படிவம் 4 மாணவர் ஒருவரை அங்குள்ள ஒரு மூத்த மாணவர் கொடுமைப்படுத்தி, தாக்கியதாகக் கூறப்படுகிறது.
செப்டம்பர் 24 ஆம் தேதி காலை 10.05 மணிக்கு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரால் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டதாக கோலா கங்சார் மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் உமர் பக்தியார் யாக்கோப் கூறினார்.
“பாதிக்கப்பட்டவர் அப்பள்ளியில் பயிலும் ஐந்தாவது படிவ மாணவரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
“பாதிக்கப்பட்ட மாணவர் பள்ளி அதிகாரிகளால் சிகிச்சைக்காக கோலா கங்சார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதுகுறித்து அவர் இன்று (நவம்பர் 4) வெளியிட்டுள்ள அறிக்கையில், “உடல் பரிசோதனையில், பாதிக்கப்பட்டவருக்கு கடுமையான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பது தெரியவந்தது என்றும் ACP உமர் பக்தியார் கூறினார்.
தானாக முன்வந்து காயப்படுத்தியதற்காக குற்றவியல் சட்டத்தின் 323வது பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது என்றார்.
இது குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை அல்லது அதிகபட்சமாக RM2,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்றார்.