வீட்டில் திடீரென ஏற்பட்ட தீ; தீக்காயத்துடன் உயிர்தப்பினார் ஆசிரியர்

கோத்தா மருடு:

கோத்தா மருடு, ஜாலான் பினாடோவில் உள்ள கம்போங் வானி தாகரோவில் நேற்றிரவு அவர் வசித்த வீடு திடீரென தீப்பிடித்து எரிந்ததில், ஆசிரியர் ஒருவர் கை, கால்களில் தீக்காயம் அடைந்தார்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 45 வயதுடைய ஆசிரியர், இரவு கோத்தா மருடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக, மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் சபா மாநில செயல்பாட்டு மையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

சம்பவம் தொடர்பில் இரவு 8.18 மணிக்கு தங்களுக்கு அவசர அழைப்பு வந்தது என்றும், உடனே கோத்தா மருடு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் 14 உறுப்பினர்கள் மற்றும் இயந்திரங்களுடன் அவ்விடத்திற்கு விரைந்தார்.

அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பாதிக்கப்பட்டவரை மீட்டு ஆரம்ப சிகிச்சையளித்த பின்னர், மேலதிக சிகிச்சைக்காக கோத்தா மருடு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்” என்று அவர் கூறினார்.

“தீ விபத்துக்கான உண்மையான காரணம் மற்றும் இழப்பு ஆகியன இன்னும் விசாரணையில் உள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here