உம்ரா யாத்திரையை நிர்வகிக்கும் பயண தரகர் நிறுவனங்களின் தகுதி மதிப்பாய்வு செய்யப்படும்- சுற்றுலா அமைச்சகம்

கோலாலம்பூர்:

சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சகம் உம்ரா பயணங்களை ஏற்பாடு செய்வதில் ஈடுபட்டுள்ள பயண இடைத்தரகர் நிறுவனங்களின் தகுதி மதிப்பாய்வு செய்யப்படும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த விதிமீறல் நிறுவனங்களுக்கு எதிராக அவர்களின் உரிமத்தை ரத்து செய்தல் போன்ற கடுமையான நடவடிக்கைகளை அமல்படுத்திய போதிலும், பயண இடைத்தரகு நிறுவனங்களால் ஏமாற்றப்பட்ட உம்ரா யாத்ரீகர்கள் அளித்த புகார்களே இதற்குக் காரணம் என்று அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங் கூறினார்.

மறுஆய்வுக் குழுவை வழிநடத்தி, ஒரு மாதத்திற்குள் முழுமையான அறிக்கையை துணை சுகாதார அமைச்சர் கைருல் ஃபிர்தௌஸ் அக்பர் கான் சமர்பிப்பார் என்று அவர் மேலும் கூறினார்.

“உம்ரா யாத்ரீகர்களைக் கையாள்வதில் இந்த பயண நிறுவனங்கள் வணிகத்தை நடத்துவதில் அதிக பொறுப்புடன் இருப்பதை உறுதிசெய்யவும், தங்கள் வாடிக்கையாளர்களை புறக்கணிக்காமல் இருக்கவும் இந்த நடவடிக்கை உதவும் ” என்று அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here