கோத்தா பாரு:
இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 5) காலை 8 மணி நிலவரப்படி, பாசீர் மாஸ் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1,952 குடும்பங்களைச் சேர்ந்த 6,009 பேர் இன்னமும் தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு 13 நிவாரண மையங்கள் செயற்பாட்டிலி இருப்பதாக சமூக நலத்துறையின் இன்போ பென்கானா போர்டல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.