மின்தூக்கி கதவில் தலை சிக்கியதில் பராமரிப்புப் பணியாளர் தினேஷ் குமார் பலி

ஜார்ஜ் டவுன்:

ஜாலான் பர்மாவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் மின்தூக்கி பராமரிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, மின்தூக்கியின் கதவுகளுக்கிடையில் ​​தலை சிக்கியதில் பராமரிப்புப் பணியாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இன்று மாலை 4.45 மணியளவில் நடந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட 28 வயதான R. தினேஷ் குமார், சம்பவ இடத்திலேயே இறந்தார், அதேநேரத்தில் அவருடன் பணியிலிருந்த 53 வயதான மற்றொரு பராமரிப்பு பணியாளர் அதிஷ்டவசமாக உயிர் பிழைத்தார் என்று பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) ஆபரேஷன்ஸ் கமாண்டர், அஹ்மட் ரெஸ்கி ஃபாரிஸ் இஸ்மாயில் கூறினார்.

குறித்த சம்பவத்தில் தினேஷ் குமாரின் தலை லிஃப்ட் கதவில் சிக்கிக்கொண்டது, அதே நேரத்தில் மற்றைய நபர் லிஃப்டில் சிக்கிக்கொண்டார் என்றும், தீயணைப்பு பிரிவினர் லிஃப்ட் கதவைத் திறந்து பாதிக்கப்பட்ட இருவரையும் அகற்றினர், இருப்பினும் 28 வயதான பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே இறந்தார் மற்றையவர் உயிர் பிழைத்தார்,” என்று அவர் கூறினார்.

உயிரிழந்தவரின் உடல், மேலதிக நடவடிக்கைகளுக்காக சுகாதார அமைச்சு மற்றும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் மீட்பு நடவடிக்கை மாலை 5.56 மணிக்கு முழுமையாக முடிந்தது,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here