ஏழுமலையான் கண்கள் மூடி இருப்பதற்கு காரணம்!

திருப்பதி திருமலை கோவில் பல அற்புதங்களுக்கு பெயர் பெற்றது. இந்த கோவில் இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் பிரசிதி பெற்ற புனித யாத்திரைகளில் ஒன்றாகும். விஷ்ணுவின் அவதாரம் என்று நம்பப்படும் வெங்கடேசப் பெருமானுக்கு இந்த கோயில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ளது. இந்த புண்ணிய ஸ்தலத்தைப் பற்றி பல புராணக் கதைகள் இருந்தாலும், ஒரு சுவாரசிய கதை வெங்கடேஷ்வரரின் மூடிய கண்களைப் பற்றி உள்ளது. ஏழுமலையானின் கண்கள் ஏன் மூடப்பட்டிருக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

ஏழுமலையானின் சக்திவாய்ந்த பார்வை:பொதுவாக திருக்கோயில்களின் மூலக் கடவுள் சிலைகளின் கண்மலர்களை யோக நிலையில் வடிப்பது தான் மரபு. அவை திறந்திருப்பது போலக் காட்டுவதற்கு சிலையின் கண்மலர் மேல் வெள்ளிக் கண்மலர்களைச் சாத்துவதே வழக்கம். கடவுளின் யோக நிலை, கடவுள் காலம் காலமாக (அனவரதமும்) உலக நன்மையின் சிந்தனையிலேயே இருப்பதாக ஐதீகம்.திருப்பதி திருமலை கோவிலில் வெங்கடேஷ்வரர் நவீன யுகத்தில் (கலியுகம்) உறைவிடமாக வசிப்பதாக அறியப்படுகிறது.

வெங்கடேசப் பெருமான் சக்திவாய்ந்த பார்வையுடன் பெரிய கண்களை உடையவராக அறியப்படுகிறார். அவர் பிரபஞ்ச சக்தியை வெளிப்படுத்துவதால் பக்தர்கள் இறைவனின் கண்களை நேரடியாகப் பார்க்க முடியாது. வெங்கடேசுவரரின் கண்கள் வெள்ளை முகமூடியால் மூடப்பட்டிருப்பதற்கு இதுவே காரணம். ஆனால் ஒவ்வொரு வியாழக்கிழமையும், கண்கள் ஒப்பீட்டளவில் சிறியதாக இருப்பதால், முகமூடி நகர்த்தப்படுகிறது. மேலும் பக்தர்கள் தெய்வத்தின் கண்களை அப்போது பார்க்க முடியும்.

வியாழக்கிழமை கண்கள் தெரிய காரணம் என்ன?                                      (திருப்பாவாடை நேத்ர தரிசனம்)
வியாழக்கிழமைதோறும் வெங்கடேசப் பெருமாளுக்கு இரண்டாவது அர்ச்சனைக்குப் பிறகு நடைபெறும் நிவேதனம் ‘திருப்பாவாடை சேவை’  ஆகும். இதை ‘அன்ன கூடோத்ஸவம்’ என்றும் கூறுவார்கள்.
வியாழக்கிழமை காலை 6 மணிக்கு எம்பெருமான் மூலமூர்த்திக்கு அணிந்துள்ள ஆபரணங்கள் அனைத்தையும் களைந்து விடுவார்கள். பின்னர் பெருமாளுக்கு இடப்படும் திருநாமத்தின் அளவை நன்றாகக் குறைத்து கண்கள் நன்றாக தெரியும்படிச் செய்வார்கள்.

வெங்கடேசப் பெருமாளுக்கு எதிராக  மலைபோன்று புளியோதரையை குவித்து வைப்பர்.

அந்த புளியோதரையுடன் ஜிலேபியையும், முறுக்கையும் வைத்து பூவினால் அலங்கரிப்பர். இந்த புளியோதரையை நேராக கருவறையில் உள்ள எம்பெருமானுக்கு நிவேதிப்பர். இச்சேவையில் ஆர்ஜிதம் செலுத்தும் பக்தர்களும் பங்கு கொள்ளலாம். இச்சேவையின் போது வேத பண்டிதர்கள் வேத பாராயணம் சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.  பின்னர் பக்தர்களுக்கு இச்சேவையுடன் ஸ்வாமி நேத்ர தரிசனமும் உண்டு.

குறிப்பாக இந்த வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்பாக நகைகளை கழற்றும்போது அவர் அணிந்த ஆபரணங்கள் அனைத்தும் சூடாக கொதிக்கும். மேலும் அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது 3வது கண்களை திறக்கிறார் என்பது ஐதீகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here