விபத்துக்குள்ளாகி கால்வாயில் விழுந்த வாகனம்; நீரில் மூழ்கி இருவர் பலி

ஈப்போ:

நேற்றுக் காலை கம்போங் பூலாவ் பிசாங்கின், ஜாலான் போத்தா கிரி-தஞ்சுங் பெலாஞ்சா சாலையில் நான்கு சக்கர வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, கால்வாயில் தலைகீழாக கவிழ்ந்து விழுந்ததில், அதில் பயணம் செய்த இருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

காலை 11.40 மணிக்கு நடந்த சம்பவத்தின் போது, தோயோத்தா ஹிலக்ஸ் (4X4) காரின் ஓட்டுநர் மற்றும் ஒரு பயணி ஆகிய இருவரும் கம்போங்பூலாவ் பிசாங்கில் உள்ள ஒரு செம்பனைத் தோட்டத்திலிருந்து
சென்றதாக தென் பேராக் மாவட்ட துணை போலீஸ் தலைவர் DSP முகமட் உசிர் இஸ்மாயில் கூறினார்.

“விபத்தின் போது, ஓட்டுநர் மற்றும் பயணி இருவரும் கால்வாயில் மூழ்கிய வாகனத்திற்குள் சிக்கிக் கொண்டதாக நம்பப்படுகிறது. தீயணைப்பு வீரர்கள் பின்னர் இருவரையும் வாகனத்திலிருந்து விடுவித்தனர், ஆனால் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது, ”என்று அவர் நேற்றிரவு ளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த வழக்கு தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் தென் பேராக் தெங்கா மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் விசாரணை அதிகாரியை 014-6790829 என்ற எண்ணில் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு அவர் மேலும் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here