ஜோர்ஜ் டவுன்:
பினாங்கு மாநிலத்தில் மலேசிய மற்றும் டிஜிட்டல் பினாங்கு உருமாறும் திட்டத்தை டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ இன்று அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து, உரையாற்றினார்
இதன்போது “தென்கிழக்காசியாவில் சுமார் 350 மில்லியன் இணைய பயனர்கள் உள்ளனர். இது பொருளாதார வளர்ச்சியில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது, குறிப்பாக வணிகங்கள் மற்றும் தொழில் முனைவோருக்கு புதிய வாய்ப்புகளை இது உருவாக்குகிறது” என்றார் அவர் .
இந்நிலையில், டிஜிட்டல் தொழில் நுட்பத்தால் ஏற்படும் பல்வேறு வகையான தீங்குகளிலிருந்து குடிமக்களின் நலனைப் பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்றார்.