கோத்தா கினாபாலு:
சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று (ஜனவரி 23) முதல்வர் டத்தோஸ்ரீ ஹாஜி நூரை மரியாதை நிமிர்த்தம் சந்தித்தார்.
சிலாங்கூர் மாநில சட்ட மன்ற உறுப்பினர்கள், அரசுத் துறைத் தலைவர்கள், அரசுடன் இணைக்கப்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட அதிகாரிகள் உட்பட 160 பேருடன் அமிருடின் ஜன. 21 முதல், நான்கு நாள் பணி பயணமாக சபா வந்துள்ளார்.
அவரது இந்த விஜயத்தின் போது, அவர் சபா பல்கலைக்கழகத்தின் (UMS) இஸ்லாமிய மையத்தில் நடைபெற்ற ஜெலஜா மஹாசிஸ்வா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.