நடிகைகளின் வாழ்க்கை வரலாற்று படங்களில் நடிக்க ஆசைப்படும் அனன்யா பாண்டே

பாலிவுட் சினிமாவின் இளம் கவர்ச்சி நடிகை அனன்யா பாண்டே. ‘ஸ்டூடன்ட் ஆப் தி இயர் 2’, ‘காலி பீலி’, ‘கெஹ்ரையான்’, ‘லைகர்’, ‘டிரீம் கேர்ள்-2 புல்’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது ‘கண்ட்ரோல்’ என்ற படத்தில் நடித்துள்ளார். மூத்த அரசியல்வாதியும், வக்கீலுமான சி சங்கரன் நாயர் வாழ்க்கை வரலாற்று படத்திலும் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

பொதுவாகவே சவாலான வேடங்களில் நடித்து கவனம் ஈர்த்து வரும் அனன்யா பாண்டே, தற்போது முன்னாள் நடிகைகள் சிலரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். அந்த வகையில் பாலிவுட் முன்னாள் நடிகைகள் மதுபாலா மற்றும் ரேகா ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க விரும்புவதாக அனன்யா பாண்டே தெரிவித்துள்ளார். அவர்களின் வாழ்க்கையில் சொல்லப்படாத பல்வேறு சம்பவங்களை வெளிக்காட்டும் கண்ணாடியாக இருக்க ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மதுபாலா, ரேகா ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று படங்களை எடுக்க விரும்புவதாக கூறிய பல இயக்குனர்களின் கவனம் தற்போது அனன்யா பாண்டே மீது திரும்பி இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here