தும்பாட்:
23 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக சந்தேகிக்கப்படும் போலீஸ் இன்ஸ்பெக்டரின் விளக்கமறியல் கடந்த ஜனவரி 28ம் தேதி முதல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், அவரை மேலும் நாள் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
38 வயதான காவல்துறை அதிகாரிக்கு எதிரான விளக்கமறியல் விண்ணப்பம் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி இன்றுடன் முடிவடைந்த நிலையில், அவரை நாளை வரை விளக்கமறியலில் வைக்க தும்பாட் மாவட்ட நீதிமன்ற நீதிபதி வான் அஷ்ருல் அஃஹாம் முஹமட் அஸ்மி இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பாலியல் வன்கொடுமைச் சட்டத்தின் 376-வது பிரிவின்படி சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரியை விசாரிக்க அனுமதிக்கும் வகையில் அவரது தடுப்புக் காவலை ஒரு நாள் நீட்டிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
பாதிக்கப்பட்ட பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறுவதற்கு முன்பு, அந்த அதிகாரி 23 வயதுப் பெண்ணை விசாரணை நோக்கங்களுக்காக அழைத்ததாக கிளந்தான் காவல்துறைத் தலைவர் டத்தோ முஹம்மது ஜாக்கி ஹாருன் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
அந்த அறிக்கையின் அடிப்படையில், இணையத்தில் அழகுசாதன பொருட்களை விற்பனை செய்யும் பாதிக்கப்பட்டவர், தனது நண்பர் சம்பந்தப்பட்ட ஆபாசமாக பேசி, மிரட்டி பணம் பறித்தல் வழக்கில் சாட்சியாக அங்கு அழைக்கப்பட்டதாகக் கூறினார்.