பாலிங்:
கோலா கெட்டில் முக்கிம் தாவார், கம்போங் பாடாங் லாலாங் பெசாவில் புதிதாக கட்டப்பட்ட செங்கல் சுவர் நேற்று இடிந்து விழுந்ததில், எட்டு வயது சிறுவன் உயிரிழந்தான்.
நேற்றுக்காலை 10.30 மணிக்கு நடந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட சிறுவன் தாவாரிலுள்ள கிளினிக் கேசிஹாதானுக்கு செல்லும் வழியில் குறித்த சிறுவன் இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது.
“சம்பவத்தின் போது, பாதிக்கப்பட்டவர் தனது இளைய சகோதரருடன் குறித்த சுவருக்கருகில் விளையாடிக்கொண்டிருந்ததாகவும், அதேநேரத்தில் பாதிக்கப்பட்டவரின் தாயார் சமைத்துக்கொண்டிருந்ததாகவும், அப்போது திடீரென பெரிய சத்தம் கேட்டு ஓடிவந்து பார்த்தபோது இடிபாட்டுக்கிடையில் மகன் சிக்குண்டிருந்ததையும், மற்றையவர் சிறிய சிராய்ப்புக் காயங்களுக்கு உள்ளானதாகவும் பாலிங் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஷம்சுதீன் மமட் கூறினார்.
பாதிக்கப்பட்டவரின் உடல் அலோர் ஸ்டாரிலுள்ள சுல்தானா பஹியா மருத்துவமனையின் தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டதாக ஷம்சுதீன் கூறினார்.
பெற்றோரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குழந்தைகள் சட்டம் 2001 பிரிவு 31(1)ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.