இரு வாகனப் பழுதுபார்ப்பு பட்டறையில் தீ; 16 வாகனங்கள் தீயில் எரிந்து நாசம்

சுங்கை பட்டாணி:

தாமான் கெளடியில் உள்ள இரண்டு வாகனப் பழுதுபார்ப்பு பட்டறையில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 5 கார்கள், 11 மோட்டார் சைக்கிள்கள் என மொத்தம் 16 வாகனங்கள் எரிந்து நாசமாயின.

இன்று அதிகாலை 5.23 மணிக்கு தீ விபத்து குறித்து தமது துறைக்கு அழைப்பு வந்தது என்று, சுங்கை பட்டாணி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் இஸ்மாயில் முகமட் ஜைன் கூறினார்.

தகவல் கிடைத்ததும் முஹமட் ரஹிமி அபு ஹசன் தலைமையிலான சுங்கை பட்டாணி உறுப்பினர்கள் குழு 11 உறுப்பினர்களுடன் சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்றதாக அவர் கூறினார்.

“அதிகாலை 5.45 மணியளவில் தீ வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்றுனம் தீயில் 16 வாகனங்கள் எரிந்து நாசமானது” என்றும் அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here