லங்காவியில் 14,000 மெத்தம்பெட்டமைன் மாத்திரைகள் வைத்திருந்த தாய்லாந்து நபர் கைது

அலோர் ஸ்டார்:

கடந்த புதன்கிழமை (மார்ச் 6) லங்காவி படகு முனையத்தின் அனைத்துலக வருகைப் பகுதியில்,  14,000 மெத்தம்பேட்டமைன் மாத்திரைகள் வைத்திருந்ததாக நம்பப்படும் ஒரு தாய்லாந்து நாட்டவரை மலேசிய சுங்ஜத்துறை கைது செய்தது.

குறித்த நாளில் பிற்பகல் 2.30 மணியளவில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துகொண்ட 42 வயதுடைய நபரை, லங்காவி போதைப்பொருள் தடுப்பு பிரிவின் சுங்க அதிகாரிகள் குழு கைது செய்ததாக கெடா சுங்கத்துறை இயக்குனர் நோர் இசா அப்துல் லத்திஃப் தெரிவித்தார்.

அவரது உடமைகளை ஆய்வு செய்ததில் 1,102 கிராம் எடையுள்ள 11,600 மெத்தாம்பெட்டமைன் மாத்திரைகள் கொண்ட நீல நிற பொட்டலத்தை அதிகாரிகள் குழு கண்டறிந்தது. மேலும் அந்த நபரின் கருப்பு இடுப்புப் பையை ஆய்வு செய்ததில், அதனு 228 கிராம் எடையுள்ள 2,400 மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட “மொத்த மாத்திரைகளின் எண்ணிக்கை 14,000 என்றும், அவற்றின் மொத்த எடை 1,330 கிராம் என்றும், அதன் மதிப்பு RM210,000 என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது,” என்று அவர் இன்று (மார்ச் 12) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் அவர் மெத்தம்பேட்டமைன் பாவித்திருப்பது கண்டறியப்பட்டதாக இசா கூறினார்.

ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 39B இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுவதாகவும், அவர் மார்ச் 13 வரை ஏழு நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும், கடத்தல் நடவடிக்கைகள் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் 1-800-88-8855க்கு கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here