காதலியால் கத்திக் குத்துக்குள்ளான காதலன் பலி

ஷா ஆலாம்:

கோத்தா கெமுனிங்கிற்கு அருகிலுள்ள பண்டார் ரிம்பாயுவில், காதலியால் கத்திக் குத்துக்குள்ளான பகுதி நேர புகைப்படக் கலைஞர் ஒருவர் நேற்று உயிரிழந்தார்.

26 வயதான அந்த பகுதிநேர புகைப்படக் கலைஞர், சைபர்ஜெயா மருத்துவமனையில் காலை 7.25 மணியளவில் இடது மணிக்கட்டு மற்றும் இடது காலில் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் சிகிச்சை பெற்றுவந்தவேளை, சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

“பாதிக்கப்பட்டவர் ஒரு தனியார் கிளினிக்கிலிருந்து மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக அங்கிருந்த ஒரு மருத்துவர் என்று, கோலா லங்காட் மாவட்ட காவல்துறைத் தலைவர், அஹ்மட் ரித்வான் முகமட் நார் @ சாலே கூறினார்.

இன்று மதியம் 12.30 மணியளவில் சைபர்ஜெயா வைத்தியசாலைக்கு அருகாமையில் குறித்த நபரின் 26 வயது காதலி கைது செய்யப்பட்டதாக அஹ்மட் ரித்வான் தெரிவித்தார்.

“சந்தேக நபர் ஒரு பகுதிநேர மாடலாக பணிபுரிகிறார் என்றும், அவருக்கு முந்தைய குற்றவியல் பதிவுகள் எதுவும் இல்லை,” என்றும் அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.

கொலை வழக்கு விசாரணைக்காக பாதிக்கப்பட்டவரின் காதலி 6 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here