ஜோகூர் பாசீர் கூடாங்கில் நேற்று ஒரு குழந்தை தனது தாயார் கழுத்தை அறுத்ததால் இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது. சம்பவம் நடந்தபோது 18 மாத குழந்தை ஒரு வீட்டின் வரவேற்பறையில் இருந்ததாக ஶ்ரீ ஆலம் போலீஸ் தலைவர் சோஹைமி இஷாக் கூறினார்.
(குழந்தையின் மரணம்) கழுத்தில் ஏற்பட்ட வெட்டுக் காயத்தால் ஏற்பட்டது. விசாரணைக்கு உதவுவதற்காக பக்கத்து வீட்டுக்காரர் வாக்குமூலம் அளித்துள்ளார் என்றார். சந்தேக நபருக்கு மனநல கோளாறு இருக்கிறதா என்று கேட்டபோது சோஹைமி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். 32 வயதான தாய் ஏழு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மதியம் 1.30 மணியளவில் நடந்த சம்பவத்தில், அந்தப் பெண் தனது மகனின் கழுத்தை அறுத்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரைப் படம் பிடித்து, வாட்ஸ்அப் மூலம் தனது கணவருக்கு அனுப்பியதாக நம்பப்படுகிறது. சம்பவத்திற்கு பயன்படுத்தியதாக கருதப்படும் கத்தியை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.