உறுதியான பாஜக-பாமக கூட்டணி ; தொகுதி பங்கீடு குறித்து கையெழுத்து

சென்னை:

நேற்று மாலை தைலாபுரத்தில் கூடிய பாமக செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்தினை அடுத்து, மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக பாமக அறிவித்தது.

அதன்படி, NDA கூட்டணியில் இணைந்துள்ள பாமகவிற்கு 10 தொகுதிகள், மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க பாஜக ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கான ஒப்பந்தம் இன்று காலை கையெழுத்தாகிறது.

இதற்காக தைலாபுரத்தில் இன்று காலை, பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ஆகியோரை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து பேசி வருகிறார்.

உடன் பாஜக இணையமைச்சர் எல்.முருகன் உள்ளார். தொகுதி பங்கீடு உறுதியானதை அடுத்து, சேலத்தில் பிரதமர் மோடி பங்குபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அன்புமணியும் பங்கேற்கிறார்.

ஓரிரு நாட்களில் பாமகவின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here