இந்தோனேசிய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பிராபோவோ சுபியான்தோவுக்கு பிரதமர் வாழ்த்து

கோலாலம்பூர்:

மீபத்தில் நடந்த இந்தோனேசிய அதிபர் தேர்தல் 2024ல் அதிகாரப்பூர்வ வெற்றியாளராக நேற்று அறிவிக்கப்பட்ட பிரபோவோ சுபியான்தோவுக்கு பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

பிராபோவா இந்தோனேசிய அதிபரான பின்னர் வாழ்த்து தெரிவித்த முதல் உலக நாட்டு தலைவர் என்ற பெருமையை தான் பெற்றதாக பிரதமர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு முகநூல் பதிவில் கூறினார்.

தனக்கு இந்தோனேசிய மக்கள் கொடுத்துள்ள பொறுப்பு மற்றும் கடமையை பிராபோவோ திறம்பட செயல்படுத்த முடியும் என்றும், அவ்வாழ்த்துச் செய்தியில் அன்வார் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here