கேட்பனுக்காக ‘சொன்னதை செய்த’ ராகவா லாரன்ஸ்

கேட்பன் என அன்பாக அழைக்கப்பட்ட நடிகர் விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் டிசம்பர் 28 2023 ஆம் ஆண்டு  காலமானார். இன்று முன்னணி நட்சத்திரமாக இருக்கும் பல நடிகர்களுக்கு விதையிட்டவர் விஜயகாந்த்.

பல முன்னணி நடிகர்கள் விஜயகாந்தின் இறுதி சடங்கில் கலந்து அவர்களின் துக்கத்தை பகிர்ந்து கொண்டார்கள். நடிகர் சங்கத்திற்காக பல நன்மைகளை செய்து இருக்கிறார் விஜயகாந்த். விஜயகாந்த் மகனான சண்முகப் பாண்டியன் 2015 ஆண்டு சுரேந்தரன் இயக்கத்தில் சகாப்தம் என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகினார். பின் 2018 ஆம் ஆண்டு மதுர வீரன் என்ற படத்தில் நடித்தார். இப்பொழுது படைத்தலைவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் அன்பு இயக்கத்தில் இளையராஜா இசையமைக்க முனிஷ் காந்த், யாமினி சந்தர், கஸ்தூரி ராஜா போன்ற பலர் நடித்துள்ளனர்.

விஜயகாந்த் மறைவிற்குப் பிறகு ராகவா லாரன்ஸ் வீடியோ பதிவினை வெளியிட்டார் அதில் ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவிற்கு எப்படி விஜயகாந்த் சிறப்பான பணிகளை மேற்கொண்டாரோ அதேப்போல் நாமும் செய்ய வேண்டும். பல குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக இருந்த விஜயகாந்தின் குடும்பத்திற்கு நாம் நம் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என் கூறினார்.

மேலும் விஜயகாந்தின் படத்திற்கு எவ்வளவு ஆதரவு கொடுத்தோமோ அதேப் போல அவரின் மகனான சண்முகப்பாண்டியன் படத்திற்கும் பெரும் ஆதரவு கொடுக்க வேண்டும் என மக்களிடம் கேட்டுக் கொண்டார். சண்முகப் பாண்டியன் படத்தில் வாய்ப்பு இருந்தால் நான் கெளரவ தோற்றத்தில் நடிப்பேன் என்றும் கூறினார்.

அதேப் போல் இன்று படைத்தலைவன் படப்பிடிப்பிற்கு சென்று இருக்கிறார் ராகவா லாரன்ஸ். 3 நாள் படைத்தலைவன் படத்தில் நடிப்பதற்காக கால் ஷீட் கொடுத்து இருக்கிறார். எம்மாதிரியான கதாப்பாத்திரத்தில் லாரன்ஸ் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகியுள்ளது.

ராகவா லாரன்ஸ் மற்றும் சண்முகப் பாண்டியன் இருவரும் இணைந்து படப்பிடிப்பின் போது எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நாளை படைத்தலைவன் படத்தின் அப்டேட் வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here