கோவிலில் கொடுக்கும் துளசியை சாப்பிடலாமா?

துளசி இலை புனிதமானது என்பதுடன், அனைத்து விதமான நோய்களையும் நீக்கக் கூடிய தன்மை கொண்டதாகும். தினமும் சிறிது துளசி இலையை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். துளசியை அப்படியே சாப்பிட்டாலும் சரி, துளசி இலைகள் போட்டு வைத்த தண்ணீரை குடிப்பதாலும் சரி, உடலிலுக்கு பல விதமான நன்மைகள் ஏற்படும்.

இன்று துளசி பல வகைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆன்மிகத்தை பொருத்த வரை துளசி இல்லாமல் விஷ்ணு பூஜை முழுமை பெறாது. பெருமாள், அனுமான், மகாலட்சுமி ஆகிய தெய்வங்களுக்கு துளசியால் அர்ச்சனை செய்து, துளசி மாலை அணிவித்து பூஜை செய்வது மிகவும் சிறப்பானதாகும். தினமும் துளசி செடிக்கு நீர் ஊற்றினால் கூட நம்முடைய பாவங்கள் நீங்கி, மகாலட்சுமியின் அருள் கிடைக்கும், வீட்டிலும் வாழ்விலும் மங்களங்கள் நிறையும் என்பது நம்பிக்கை.துளசி இலையின் மகத்துவம், நன்மைகள் பற்றியும், இது ஆன்மிக மற்றும் மருத்துவ பலன்கள் கொண்டது என அனைவருக்கும் தெரியும்.

பெருமாள் கோவில், அனுமான் கோவிலுக்கு சென்றால் பிரசாதமாக துளசி கொடுப்பார்கள். சிலர் இந்த துளசியை வாங்கியதும் சாப்பிட்டு விடுவார்கள். ஆனால் சிலர் அதை அப்படியே வாங்கிக் கொண்டு வந்து வீட்டின் பூஜை அறையில் வைத்து விடுவார்கள். இவை இரண்டில் எது சரி? கோவிலில் சுவாமிக்கு சாற்றிய துளசியை பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கிறார்கள். இதை சாப்பிடலாமா? கூடாதா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது.

துளசியை ஏன் சாப்பிட வேண்டும் ?

பொதுவாகவே துளசி இலைகளை சாப்பிடுவதால் உடலில் உள்ள நோய் கிருமிகள் நீங்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் கோவிலில் கொடுக்கும் துளசியை சாப்பிடுவதால் நமக்கு என்ன நடக்கும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். கோவிலில் கொடுக்கும் துளசியை சார்பிடுவதால் உடலும் மனமும் தூய்மை அடைகிறது. மனதில் உள்ள அழுக்குகள், எதிர்மறை ஆற்றல்கள் நீங்குவதற்கு உதவுகிறது. தொடர்ந்து துளசி இலைகளை சாப்பிட்டு வந்தால் ஆன்மிக பலம் அதிகரித்து, நம்முடைய உள்ளுணர்வுகள் தெய்வத்துடன் தொடர்பை ஏற்படுத்தும்.

துளசி இலைகள் புனிதமானவை என்பதால் எதிர்மறை ஆற்றல்களால் நாம் பாதிக்கப்படுவது காக்கப்படுகிறது. தீய சக்திகள், பில்லி, சூனியம் ஆகியவற்றின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கிறது. கோவிலில் கொடுக்கும் துளசி இலைகளை சாப்பிடுவதால் தியானம் மற்றும் ஆன்மிக சாதகங்கள் செய்யும் போது விரைவில் மனம் அமைதி நிலையை அடைந்து, மனதில் தெளிவை ஏற்படுத்தும். அதே போல் மனம் ஒருமுகப்படுவதையும் ஊக்குவிக்கிறது. துளசி, மகாவிஷ்ணுவுடன் தொடர்புடைய இலை என்பதால் அவருக்கு படைக்கப்பட்ட துளசியை நாம் சாப்பிடுவதால் இறைவனின் முழுமையான ஆசிகளும், இறைவன் நம்முடனேயே இருப்பது போன்ற உணர்வையும் அது ஏற்படுத்தும்.

துளசி இலைகளை உள்ள Adaptogenic தன்மை மன அழுத்தத்தை போக்கு, ஒட்டுமொத்த வாழ்க்கையும் உயர்வு பெற செய்கிறது. ஆயுர்வேதத்தில் துளசி இலை, சாத்வீக மூலிகையாக கருதப்படுகிறது. அதனால் இது தூய்மை, தெளிவு, ஒற்றுமை ஆகியவற்றை தருகிறது. துளசி இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நமக்குள்ளும் சாத்வீக ஆற்றல் அதிகரித்து உடலும், மனமும் பலமுடன் இருக்கும். கோவில்களில் பிரசாதமாக கொடுக்கப்படும் துளசியானது இறைவனின் திருமேனியின் மீது பட்டது என்பதால், இவற்றை சாப்பிடுவதால் நம்முடைய ஆராவை சுத்தம் செய்யப்படுகிறது. நம்மை சுற்றி உள்ள சூழ்நிலைகளின் தன்மையில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.

துளசி இலைகள் பெரும்பாலும் பூஜைகள், புனிதமான சடங்குகளின் போது மட்டுமே பயன்படுத்தக் கூடியது. இது பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படும் போது துளசியினவ் தெய்வீக தன்மையுடன், இறை சக்தியும் ஒன்றிணைவதால் துளசியில் தெய்வீக தன்மையானது நிறைந்திருக்கும். இதனால் இவற்றை உட்கொள்ளும் போது நமக்கும் தெரியாமல் நமக்குள் இருக்குள் தீமைகள் அழிக்கப்பட்டு, தெய்வத் தன்மை நிறைந்து விடுகிறது. இதனால் நம்முடைய வேண்டுதல்கள் தானே நிறைவேற துவங்கி விடும். தெய்வீக தன்மையை நமக்குள் அப்படியே உள்வாங்குவதற்காக தான் கோவிலில் கொடுக்கும் துளசியை சாப்பிட்டு விட வேண்டும். காய விடக் கூடாது, வீணாக்கக் கூடாது என்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here