தைவானில் பயங்கர நிலநடுக்கம்; ஜப்பான், பிலிப்பைன்ஸில் சுனாமி எச்சரிக்கை விடுப்பு

தைப்பே:

தைவானின் கிழக்குப் பகுதியில் உள்ளூர் நேரப்படி இன்று (ஏப்ரல் 3) காலை 8 மணிக்கு (0000 GMT) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, இதன்காரணமாக சுயராஜ்ய தீவு, தெற்கு ஜப்பானின் சில பகுதிகள் மற்றும் பிலிப்பைன்ஸில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தைவானின் ஹுவாலியன் நகருக்கு தெற்கே 18 கிலோமீட்டர் (11 மைல்) தொலைவில் 34.8 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டுள்ள இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மியாகோஜிமா தீவு உட்பட இப்பகுதியில் உள்ள தொலைதூர ஜப்பானிய தீவுகளுக்கு உடனடியாக மூன்று மீட்டர் (10 அடி) உயரமான சுனாமி அலைகள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

1999ஆம் ஆண்டுக்குப் பிறகு, தைவானில் இன்று 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டதாக தைவான் அரசு ஊடகம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here