ஈப்போ அடுக்குமாடிக் குடியிருப்பின் 13வது மாடியிலிருந்து கீழே விழுந்ததாக நம்பப்படும் முதியவரின் சடலம் கண்டெடுப்பு

ஈப்போ:

பெர்சியாரான் பண்டார் திமாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 13வது மாடியில் இருந்து விழுந்ததாக நம்பப்படும் 91 வயது முதியவர் ஒருவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.

குறித்த முதியவரது சடலம் நேற்று காலை 8.20 மணியளவில் அவ்வீட்டுப் பகுதி பாதுகாவலரால் கண்டெடுக்கப்பட்டதாக ஈப்போ மாவட்ட காவல்துறை தலைவர் துணை ஆணையர் அபாங் ஜைனல் அப்டின் அபாங் அமாட் கூறினார்.

“சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப விசாரணையின் விளைவாக, இறந்தவரின் சடலம் முழுமையற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது என்றும், இவ்வழக்கில் குற்றவியல் கூறுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும், இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது,” என்றும் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here