கோலாலம்பூர்:
ஜாலான் புக்கிட் பிந்தாங்கில் சுமார் அரை மணி நேரம் காரில் சிக்கியிருந்த இரண்டு வயது குழந்தையை மலேசியக் குடிமைத் தற்காப்புப் படையினர் பாதுகாப்பாக மீட்டனர்.
நேற்றிரவு 8.55 மணிக்கு குறித்த சம்பவம் தொடர்பாக அவரது தரப்புக்கு அவசர அழைப்பு வந்தது என்று, மலேசியக் குடிமைத் தற்காப்புப் படையின் (APM) கோலாலம்பூர் செயல்பாட்டு அதிகாரி லெப்டினன்ட் (PA) ஷாருல் கமார் முகமட் ஜோஹாரி கூறினார்.
“தகவல் கிடைத்ததும் அங்குவந்த தற்காப்பு படையினர் சுமார் 10 நிமிடங்களுக்குள் கார் கதவை வெற்றிகரமாக திறந்து, குழந்தையை மீட்டனர்,” என்று அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தை டிஸ்போசபிள் டயப்பர்களை மாற்றும்போது, அவர் கார் சாவியை மறந்து, தனது மகனுடன் காருக்குள் விட்டுச் சென்றபோது, இந்த சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது.