‘அரண்மனை’ படத்தின் நான்காம் பாகம் அடுத்த வாரம் ரிலீசாகவுள்ளது. இதற்கான ப்ரோமோஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கமலின் ‘அன்பே சிவம்’ படம் குறித்து சுந்தர் சி பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக கமர்ஷியல் ஹிட் படங்களை இயக்கி வருபவர் சுந்தர் சி. இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்தும் காமெடியில் கலக்குவது வழக்கம். இதனாலே அனைத்து தரப்பு ரசிகர்களையும் இவரது படங்கள் கவரும். இந்நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள ‘அரண்மனை’ படத்தின் நான்காம் பாகம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது. இதற்கான ப்ரோமோஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.
தமிழ் சினிமாவில் தற்போது கமர்ஷியல் கலந்த காமெடி படங்களுக்கு ஒரு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இது மாதிரியான படங்களை இயக்குவதில் கை தேர்ந்தவரான சுந்தர் சி, ஏற்கனவே ஹாரர் காமெடி பாணியில் ‘அரண்மனை’ படத்தின் மூன்று பாகங்களை இயக்கியுள்ளார். இப்படங்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்துள்ளன.
இதனையடுத்து தற்போது ‘அரண்மனை’ படத்தின் நான்காவது பாகத்தை இயக்கியுள்ளார். இப்படம் அடுத்த வாரம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இதற்கான ப்ரோமோஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. அப்படி ‘அரண்மனை 4’ சம்பந்தமான ப்ரோமோஷனில், தனது இயக்கத்தில் வெளியான ‘அன்பே சிவன்’ படம் குறித்து பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது, இவரின் இயக்கத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு கமலின் கதை, திரைக்கதை, வசனத்தில் வெளியானது ‘அன்பே சிவம்’. சுந்தர் சி பாணி இல்லாமல் முழுக்க முழுக்க மாறுப்பட்ட படமாக வெளியான ‘அன்பே சிவம்’ இன்று கல்ட் கிளாசிக்காக அனைவராலும் கொண்டாடப்பட்டாலும், ரிலீசான சமயத்தில் வணிகரீதியாக வரவேற்பை பெறவில்லை. இதனால் ‘அன்பே சிவம்’ மாதிரியான படங்களை மீண்டும் இயக்காமல், கமர்ஷியல் பக்கமே சென்று விட்டார்.
இந்நிலையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில், ‘அன்பே சிவம்’ மாதிரியான படங்கள் ஏன் இயக்குவதில்லை என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்தவர், ‘அன்பே சிவம்’ படத்தால் எனக்கு ஏற்பட்ட இழப்புகள் தான் அதிகம். சந்தோஷமாக இயக்கிய படத்தால் கிட்டத்தட்ட ஒரு வருடமாக வீட்டில் உட்கார்ந்து இருந்தேன். இப்போது பலர் ‘அன்பே சிவம்’ மாதிரியான படங்கள் ஏன் எடுப்பதில்லை என கேட்கின்றனர். அப்போதெல்லாம் எனக்கு கோபம் தான் வரும்.
நீங்க எல்லாம் படம் எடுத்தப்ப எங்கயா போயிருந்தீங்க என்று தான் கேட்க தோன்றும். படங்கள் வந்தப்ப ஆதரவை கொடுத்திருந்தால், அந்த மாதிரியான படங்கள் தொடர்ந்து பண்ண எனக்கு ஆர்வம் ஏற்பட்டிருக்கும். இவ்வாறு தெரிவித்துள்ளார் சுந்தர் சி. அவரின் இந்த பதில் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.





















