இஸ்கண்டார் புத்திரி:
முறையான பயண ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த மற்றும் நாட்டிற்குள் நுழைந்த குற்றசாட்டில் 18 வெளிநாட்டவர்கள் ஜோகூர் குடிநுழைவுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (மே 19) இரவு 8.50 மணிக்கு இஸ்கண்டார் புத்திரி நகராண்மைக் கழகத்தினருடன் (MBI) இணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஜோகூர் குடிநுழைவு துறை இயக்குநர் பஹாருடின் தாஹிர் தெரிவித்தார்.




















