பாப்புவா நியூ கினியில் நிலச்சரிவு; நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு

பாப்புவா நியூ கினியின் வடக்குப் பகுதி கிராமத்தில் நேற்று (மே 24) அதிகாலை 3 மணியளவில் ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது.

தலைநகர் போர்ட் மோர்ஸ்பியிலிருந்து ஏறக்குறைய 600 கிலோமீட்டர் வடக்கே அமைந்துள்ளது காவ்கலம் கிராமம். அங்கு பலரும் தூங்கிக்கொண்டிருந்த வேளையில், 50க்கு மேற்பட்ட வீடுகள் நிலச்சரிவில் புதையுண்டதாக நிங்கா ரோல் எனும் குடியிருப்பாளர் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

கிட்டத்தட்ட 300 பேர் உயிரிழ்ந்துவிட்டதாகவும் அவர்களில் தனது சகோதரரும் நெருங்கிய உறவினரும் ஒருவர் என்றும் அவர் கூறியதாக அச்செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கழகமும் இதர உள்ளூர் ஊடகங்களும் 100க்கு மேற்பட்டோர் மாண்டதாகத் தகவல் வெளியிட்டுள்ளன, ஆனால் அதிகாரிகள் இந்த எண்ணிக்கையை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here