கராச்சி:
பாகிஸ்தானில் இரு தரப்பினர் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்டதில் 36 பேர் கொல்லப்பட்டனர். 160 பேர் காயமுற்றனர்.
உப்பர்குராம் மாவட்டம் போசேரா என்ற கிராமத்தில் மலைவாழ் மக்கள் கடந்த 5 நாட்களாக மோதலில் ஈடுபட்டுள்ளனர். நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக எழுந்த பிரச்னையில் கலவரம் வெடித்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.





















