கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூரில் உள்ள நெரிசல் மிகுந்த சாலையில் இளைஞர்கள் சிலர் அஜாக்கிரதையாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் வாகனங்களை ஓட்டி ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனையடுத்து ஆத்திரமடைந்த மக்கள், இளைஞர்களின் இளைஞர்களின் பைக்குகளை மடக்கிப் பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் கோவமான பொதுமக்கள் இளைஞர்களின் பைக்குகளை 30 அடி உயர பாலத்தில் இருந்து கீழே தூக்கி வீசினர். இதனையடுத்து, ஸ்டண்டில் ஈடுபட்ட இளைஞர்கள் உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடினர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.