சாமி கும்பிடும் போது கண்களை மூடுவது ஏன்?

வீட்டில் சாமி கும்பிடுவதாக இருந்தாலும், கோவிலுக்கு சென்று கும்பிடுவதாக இருந்தாலும் சரி, மந்திரம் சொல்வதாக இருந்தாலும் சரி கண்களை மூடிக் கொள்வது நம்முடைய வழக்கமாக உள்ளது. சிலர் சாமிக்கு தீபாராதனை காட்டும் போது கண்களை மூடிக் கொள்வார்கள். ஆனால் மந்திரங்களை சொல்லும் போதும், சாமியிடம் மனம் உருகி கும்பிடும் போதும் கண்களை மூடிக் கொள்வது சிறப்பான பலன்களை தரும் என சொல்லப்படுகிறது. எதற்காக மந்திரங்கள் சொல்லும் போது கண்களை மூட வேண்டும்? கண்களை மூடி சொல்லுவதால் என்ன பலன் கிடைக்கும் ? என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மந்திரங்கள் சொல்லும் போது கண்களை திறந்து இருந்தால் கவனச்சிதறல் ஏற்படும். அதே சமயம் கண்களை மூடியபடி மந்திரங்களை சொல்லுவதால் மனம் திடமாக இருக்கும். இதனால் தெய்வீக சக்தியுடன் தொடர்பை ஏற்படுத்த உதவும். கண்களை மூடி இருப்பதால் ஆற்றல்கள் வீணாவது குறையும். இது மனஅமைதியும், மன நிறைவும் ஏற்படும் என சொல்லப்படுகிறது. ஆன்மிக விழிப்புணர்வு அதிகரிக்கும். மந்திரங்களை கண்களை மூடி சொல்லும் போது ஆன்மிக பலமும், பக்தியும் அதிகரிக்கும்.மந்திரங்களை சொல்ல துவங்கும் போது மன அமைதி பெறுவதற்கு முதலில் காயத்ரி மந்திரம் சொல்ல வேண்டும்.

காயத்ரி மந்திரம், தியானம் மற்றும் மந்திரம் பலன் தருவதற்கு நல்ல பலன் தரும். கண்களை மூடிக் கொண்டு மந்திரங்களை சொல்வதால் மன அமைதி, தெளிவு ஏற்படுவதுடன் தெய்வீக சக்தியுடன் பலமான உறவு ஏற்படும். மனம் ஒருமுகப்பட, தெய்வீக அருள் பெற, ஆன்மிக பயணத்தில் உயர்நிலையை அடைய உதவும். கண்களை மூடி இருக்கும் போது நம்முடைய உடலானது எந்த தடுமாற்றங்களும் இல்லாமல் ஆற்றல்களை கிரகித்துக் கொண்டு, நற்பலன்களை நமக்கு தர துவங்கும்.

கண்களை மூடி மந்திரங்களை சொல்லும் போது தனித்துவமான உணர்வு ஏற்படும். மனம் நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்கும். இதனால் உள்ளார்ந்த ஆற்றலுடன் மனம் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும். மந்திரங்களை சொல்லி முடித்த பிறகு கண்களை திறந்து முதலில் கடவுளின் முகத்தை தான் பார்க்க வேண்டும். பிறகு தண்ணீரை குடித்து விட்டு, கற்பூர ஆரத்தி காட்டி விட்டு தான் பூஜையை நிறைவு செய்ய வேண்டும். இது இறை சக்தியை முழுவதுமாக பெறுவதற்கும், மந்திர ஜபத்தின் முழு ஆற்றலையும் பெறுவதற்கும் உதவும்.

சாமி கும்பிடும் போதும், மந்திர ஜபம் செய்யும் போதும் கண்களை மூடி இருப்பதால் தெய்வத்தின் உருவமானது கண்களால் ஈர்க்கப்பட்டு, மனதில் நிலை நிறுத்தப்படும். இதனால் தெய்வத்தை பற்றிய சிந்தனை மனதில் இருந்து கொண்டே இருக்கும். தெய்வ சிந்தனைகள் மனதில் இருக்கும் போது சொல்லப்படும் மந்திர ஜபமானது நல்ல பலனை தரும். இது மந்திர ஜபத்தின் முழு பலனையும் பெற்றுத் தரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here