கோலாலம்பூர்:
இந்த ஆண்டு மொத்தம் 41,234 சட்ட விரோத குடியேறிகளும், 1,607 முதலாளிகளும் பல குடியேற்ற குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று துணை உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஷம்சுல் அனுவார் நசாரா தெரிவித்தார்.
இந்தாண்டு ஜனவரி முதல் நவம்பர் 2024 வரை, குடிநுழைவுத் துறை 17,825 அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டது என்றும், இது குடிநுழைவுச் சட்டம் 1959/63, பாஸ்போர்ட் சட்டம் 1966 மற்றும் குடிநுழைவு விதிமுறைகள் 1963 ஆகியவற்றின் மீறல்களின் கீழ் சட்டவிரோதமாக குடியேறிகள் கைது செய்யப்பட்டனர்.