பிறை தொழில் பேட்டை தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து பயங்கர தீ

டணிஸ்தா சுரேஸ்

கோலாலம்பூர், 

பட்டர்வொர்த்தில் உள்ள பிறை தொழிற்பேட்டை பகுதியில் செயல்படும் ஒரு தொழிற்சாலையில் பாய்லர் எனும் கொதிகலன் வெடித்தது. அதன் தாக்கத்தில் மிகப்பெரிய தீச்சம்பவம் நிகழ்ந்தது.

ஜனவரி 17 ஆம் தேதி மாலை 4.40 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் அடர்த்தியான கரும் புகை விண்ணோக்கி எழும்பியது. இதனால் அருகில் வசிக்கும் மக்களும் வாகனமோட்டிகளும் பதற்றமடைந்தனர்.

அவசர அழைப்பு கிடைக்கப்பெற்ற பின்னர் தீயணைப்பு – மீட்பு நிலையங்களிலிருந்து தீயணைப்பு அதிகாரிகளும் வீரர்களும் தொண்டூழிய தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அந்த டேப் தயாரிப்பு தொழிற்சாலையில் சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் அதன் அலுவலகத்திலும் தொழிற்சாலையிலும் 80 பணியாளர்கள் இருந்தனர். அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

A tape factory in the Prai Industrial Area in Butterworth was engulfed in flames following a boiler explosion that caused a major fire yesterday afternoon. — Picture via Facebook/北海双溪浮油義務消防队Bomba Sukarela Sungai Puyu Butterworth Pulau Pinang
பட்டர்வொர்த்தில் உள்ள ப்ராய் தொழில்துறை பகுதியில் உள்ள டேப் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்ததில் நேற்று மதியம் பெரும் தீ விபத்து ஏற்பட்டது—

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here