அரசு ஊழியர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து சிறப்பு ஹரிராயா உதவியாக 500 ரிங்கிட் வழங்கப்படும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார் அரசாங்க ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு பண உதவியாக 250 ரிங்கிட் கிடைக்கும் என்றும் அன்வார் அறிவித்தார். இந்த முயற்சி அரசாங்கத்திற்கு சுமார் 900 மில்லியன் ரிங்கிட் செலவாகும் என்று அவர் மேலும் கூறினார்.























