பினாங்கு, பாயன் லெபாஸில் சிதைந்த நிலையில் இருந்த இரண்டு உடல்கள் மீட்பு

     பினாங்கின் பாயன் லெபாஸில் உள்ள ஜாலான் புக்கிட் காம்பீரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இன்று இரவு ஒரு பெண்ணும் ஒரு குழந்தையும் இறந்து கிடந்தனர். பக்கத்து வீட்டினர் இன்று மாலை சம்பந்தப்பட்ட வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    முதல் மீட்புப் பணியாளர்கள் ஏற்கெனவே சிதைந்த நிலையில் இருந்த இரண்டு உடல்களை மீட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. அவர்களின் உடல்கள்பிரேத பரிசோதனைக்காக பினாங்கு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஹரியான் மெட்ரோ செய்தி வெளியிட்டுள்ளது.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here