சரவாக் மாநிலத்தில் புதிய மசோதா: தேர்தல் தொகுதிகள் எண்ணிக்கை 99 ஆக உயர்வு

கோலாலம்பூர்:

சரவாக் மாநில சட்டமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை தற்போதைய 82 இலிருந்து 99 ஆக உயர்த்தும் புதிய மசோதாவை மாநில அரசு இன்று சமர்ப்பித்துள்ளது.

இந்த Dewan Undangan Negeri Bill 2025 என்ற மசோதாவை, மாநில அமைச்சர் அப்துல் கரீம் ரஹ்மான் ஹம்சா தாக்கல் செய்தார்.

“சரவாகின் மக்கள்தொகை மாற்றங்கள், நகரமயமாதல் மற்றும் சமமான பிரதிநிதித்துவத்திற்கான அதிகரித்த தேவை ஆகியவை இந்த மாற்றத்திற்கு காரணமாக உள்ளன. மாநில சட்டமன்றம் மக்களின் வளர்ச்சியடையும் தேவைகளை நேர்த்தியாக எதிர்கொள்வதற்கும், புதுமையாக செயல்படுவதற்கும் தயாராக இருக்க வேண்டும்,” என்றார் அவர்.

இன்று நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதாக The Borneo Post செய்தி வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here