இன்று சபாக் பெர்ணம், சிப்பாங் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை- MetMalaysia

ஷா ஆலம்,

சபாக் பெர்ணம் மற்றும் சிப்பாங் மாவட்டங்களில் இன்று காலை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு துறை (MetMalaysia) எச்சரித்துள்ளது.

அதேபோல் பினாங்கு, பேராக், நெகிரி செம்பிலான் மற்றும் சபா மாநிலங்களிலும் இதே வானிலை காணப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை அல்லது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் மழை ஏற்படலாம் என குறுகிய கால எச்சரிக்கைகள் வெளியிடப்படுவதாக MetMalaysia விளக்கியுள்ளது. இத்தகைய எச்சரிக்கைகள் அதிகபட்சம் ஆறு மணி நேரத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும்.

பொதுமக்கள் சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்காக www.met.gov.my, MetMalaysia சமூக ஊடகங்கள் மற்றும் myCuaca செயலியைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here