கலப்பு இரட்டையர் பிரிவில் உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் மலேசிய ஜோடி – டாங் ஜீ & ஈ வெய்

கோலாலம்பூர்:

லேசிய பூப்பந்து வரலாற்றில் புதிய சாதனை ஒன்றை டாங் ஜீ மற்றும் ஈ வெய் இணைந்து பதிவு செய்துள்ளனர். இவர்கள், உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் (BWF World Championships) கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற முதல் மலேசிய ஜோடியாகத் திகழ்கிறார்கள்.

சுவாரஸ்யமும் கடுமையான போட்டியுடனும் நடைபெற்ற இறுதிப் போட்டியில், டாங் ஜீ – ஈ வெய் ஜோடி உலக தரவரிசையில் முன்னிலையில் உள்ள ஜோடியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றி மலேசியாவின் பேட்மின்டன் வரலாற்றில் மட்டுமின்றி, அனைத்துலக அளவிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிகழ்வைத் தொடர்ந்து, இவர்கள் மீது வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்தவண்ணம் உள்ளன. மலேசிய பேட்மின்டன் சங்கம் (BAM) இந்த வெற்றியை “நாட்டின் பெருமையை உயர்த்தும் வரலாற்றுச் சாதனை” என்று வர்ணித்துள்ளது.

வெற்றிக்குப் பின்னர் பேசிய டாங் ஜீ, “இது எங்களுக்கும், மலேசியாவுக்கும் மறக்க முடியாத தருணம். எங்களை நம்பி ஆதரித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறோம்” என்றார். ஈ வெய் மேலும், “நாங்கள் கடுமையாக உழைத்து வந்தோம். இன்று அந்த உழைப்பின் பலனை கண்டோம்” என்று உணர்ச்சி பூர்வமாகக் கூறினார்.

இந்த வெற்றியால், மலேசியாவின் புதிய தலைமுறை பேட்மின்டன் வீரர்கள் சர்வதேச அரங்கில் தங்கள் திறமையை நிரூபித்திருப்பதை வலியுறுத்தும் வகையில், நாட்டின் விளையாட்டு உலகில் வரலாற்றுச் சின்னமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here