நேபாளம், அமெரிக்க குழப்பங்கள் மலேசியாவுக்கு ஒரு படிப்பினைதான் – பிரதமர்

பெட்டாலிங் ஜெயா,

பிற நாடுகளில் ஏற்பட்ட குழப்பங்கள், அமைதி மற்றும் நிலைத்தன்மையின் முக்கியத்துவத்தை நாம் நினைவுகொள்ள வேண்டும் பிரதமர் அன்வவார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். மக்கள் எப்போதும் ஒன்றிணைந்து வாழ்வதே நாட்டின் அமைதி மற்றும் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படை என்றார் அவர்.

“பல நாடுகளுடன் ஒப்பிடுகையில், மலேசியா மிகவும் நன்றாக உள்ளது, எடுத்துக்காட்டாக, நேபாளத்தில் எங்கு பார்க்கவும் கலவரங்கள் நிகழ்கின்றன, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது, ஒரு அமைச்சருக்கும் அவரது மனைவிக்கும் துயரமான சம்பவங்கள் நடந்தன என குறிப்பிட்டார். மேலும், “இரு நாட்கள் முன்பு அமெரிக்காவில் ஒரு பல்கலைக்கழகத்தில் ஒரு தலைவர் தொடர்புடைய துப்பாக்கிச் சூடு நடந்தது” என்றும் அவர் தெரிவித்தார்.

இன்று ஜோகூர் மாநில இஸ்கண்டார் புத்ரியில் நடைபெற்ற ஒரு நிகழ்வைத் தொடங்கி, அமைதியையும் ஒன்றுபட்ட நிலைத்தன்மையையும் எப்போதும் பேண மலேசியர்கள் பிரார்த்திக்க வேண்டும் என அன்வார் கூறினார்.

நேபாளத்தில், அரசியல் போராட்டங்களால் குறைந்தபட்சம் 51 பேர் உயிரிழந்தனர்; இது 2008ல் இராஜ்ய மரபு கலைத்த பின் நடந்த மிகப் பெரிய கலவரமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here