கோலாலம்பூர்:
பத்து தென்கிழக்காசிய நாடுகளை உள்ளடக்கிய ஆசியான் அமைப்பின் 47ஆம் உச்சநிலை மாநாடு, கோலாலம்பூரில் இன்று (அக்டோபர் 26) முதல் 28 வரை மூன்று நாள்கள் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் அமெரிக்கா, சீனா, ஜப்பான் உட்பட பல நாடுகளின் முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ‘மலேசியா, ஆசியான் உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கு என் இதயபூர்வமான வாழ்த்துகள். பிரதமராக பதவி ஏற்ற பிறகு எனது முதல் வெளிநாட்டு பயணமாக மலேசியா வருவது எனக்கு பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்த வருடம் ஆசியான் சமூகத்தின் 10ஆம் ஆண்டு, கிழக்கு ஆசிய உச்சநிலை மாநாட்டின் 20ஆம் ஆண்டு மற்றும் “ஆசியான் சமூகக் காட்சி 2045” போன்ற முக்கிய நிகழ்வுகளால் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆண்டாக உள்ளது. மலேசியா ஆசியான் தலைவராக வலுவான வர்த்தகமும் முதலீட்டுமூலம் பிராந்திய வளர்ச்சியை முன்னெடுத்து வருவதை நான் பாராட்டுகிறேன்’ என்று ஜப்பான் பிரதமர் சானே தக்கசி கூறினார்.
ஜப்பான் மற்றும் ஆசியான் நாடுகள் கடந்த 50 ஆண்டுகளாக நம்பிக்கையுடன் கூடிய, இதயத் தொடர்புடைய நட்பை வளர்த்துள்ளன. இந்த நெருக்கமான உறவை மேலும் வலுப்படுத்தி, ஆசியான் மற்றும் ஜப்பான் இணைந்து வளமான எதிர்காலத்துக்குச் செல்ல நான் உறுதியளிக்கிறேன் என்று அவர் மேலும் கூறினார்.





















