கோலாலம்பூர், டிசம்பர் 8 –
கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் மற்றும் பிறத் தனிநபர்கள் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் இடைத்தரகர் நடவடிக்கையைக் கட்டுப்படுத்த, அக்டோபர் 8 அன்று புதிய நடவடிக்கைகள் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன.
இதன்படி, நீதிமன்றப் போலீஸ் பணியாளர்கள் ஒவ்வொரு சில மாதங்களுக்கும் சுழற்சி முறையில் ஒவ்வொரு நீதிமன்றத்திற்கும் நியமிக்கப்படுவார்கள்.
இந்த நடவடிக்கை செப்டம்பர் 22 அன்றுப் பதிவு செய்யப்பட்ட புகாரைத் தொடர்ந்து எடுக்கப்பட்டது.
கூட்ட அரசு நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளர் அலுவலகம் நீதிமன்றச் சிறை வளாகத்தில் கட்டுப்பாடுகள் இறுக்கப்படும்.
வழக்கறிஞர்கள் மற்றும் தேசியச் சட்ட உதவி அறக்கட்டளை பிரதிநிதிகள் மட்டுமே சில நிபந்தனைகளின் கீழ் சிறை வளாகத்திற்கு வெளியே வாடிக்கையாளர்களைச் சந்திக்க அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும், ஊழியர்கள் இதில் ஈடுபடவில்லை என்பதை உறுதிப்படுத்த, நீதிமன்ற மேற்பார்வையாளர்கள் அவ்வப்போது கண்காணிப்பை நடத்துவார்கள்.
எந்தவொரு குறிப்பிட்டப் புகார்களையும் உரிய நடவடிக்கைக்கு வழிவகை செய்யுமாறுப் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.





















