வாஷிங்டன்,செய்தியாளர்கள் சந்திப்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பேசியதாவது:-
ஈரான் மீதான தாக்குதல் நடவடிக்கைகள் சரியானவை, மேலும் அமெரிக்கர்கள் அணு ஆயுதங்கள் மற்றும் ஏராளமான அச்சுறுத்தல்களுடன் ஒரு தீவிரமான, இரத்தவெறி கொண்ட பயங்கரவாத ஆட்சியை ஒருபோதும் எதிர்கொள்ள வேண்டியதில்லை என்பதை உறுதி செய்வதற்கு அவை அவசியம்.
கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக, இந்த தீய தீவிரவாதிகள் ‘அமெரிக்காவிற்கு மரணம்’ அல்லது ‘இஸ்ரேலுக்கு மரணம்’ அல்லது இரண்டும்’ என்ற கோஷங்களை எழுப்பி அமெரிக்காவை தாக்கி வருகின்றனர். அவர்கள் உலகின் முதன்மையான பயங்கரவாத ஆதரவாளர்கள் ஆவர்.
இந்த சகிக்க முடியாத அச்சுறுத்தல்கள் இனி தொடராது. புரட்சிகர காவல்படை, ஈரானிய ராணுவம் மற்றும் போலீசார் உங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு முழுமையான பொதுமன்னிப்பை பெற வேண்டும் அல்லது நிச்சய மரணத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்று நான் மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன்.
சுதந்திரத்திற்காக ஏங்கும் அனைத்து ஈரானிய தேசபக்தர்களும் இந்த தருணத்தைப் பயன்படுத்திக் கொள்ள, தைரியமாக, வீரமாக, உங்கள் நாட்டைத் திரும்பப் பெற வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அமெரிக்கா உங்களுடன் உள்ளது. நான் உங்களுக்கு ஒரு வாக்குறுதி அளித்தேன், அந்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளேன்.




















