பாகிஸ்தான் ஆன்லைன் மோசடி கும்பலுடன் தொடர்புடைய மலேசியர்கள் கைது!

கோலாலம்பூர்:

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் ஆன்லைன் மோசடிச் சிண்டிகேட்டில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் சில மலேசியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்திகளைத் தொடர்ந்து, அது குறித்து விசாரணை நடத்த மலேசியக் காவல் துறை சார்பில் ஒரு சிறப்புப் படை அங்கு அனுப்பப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத்தின் குல்பர்க் கிரீன் பகுதியில் உள்ள மோசடி கால் சென்டர் மீது பாக்கிஸ்தான் அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடிச் சோதனையின் போது மலேசியர்கள் உட்பட 258 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்துப் பாக்கிஸ்தான் அதிகாரிகளுடன் இணைந்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் காவல் துறைத் தலைவர் டான் ஸ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

சீனா மற்றும் வியட்நாமைச் சேர்ந்த பலரும் இதில் அடங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், மலேசியாவையும் வெளிநாடுகளையும் இணைக்கும் இந்த மோசடி வலைப்பின்னலைக் கண்டறியும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இதற்கிடையே, சைபர்ஜெயாவில் உள்ள தேசிய மோசடி பதிலளிப்பு மையம் (NSRC) நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட அழைப்புகளைப் பெற்று வருவதாகவும், நாட்டின் பல பகுதிகளில் வெளிநாட்டினர் முகாமிட்டு ஆன்லைன் மோசடிகளில் ஈடுபடுவதைத் தடுத்திடக் காவல் துறையினர் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here