கொரோனா தொற்றோடு தொடர்புடைய நான்கு மதராசாக்கள்

Health ministry

மு.ஆர்.பாலு

புத்ரா ஜெயா,
கொரோனா தொற்றோடு தொடர்புடைய நான்கு மதராசாக்கள் அடையாளம் காணப் பட்டு விட்டதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

நான்கு மதராசாக்களும் ஸ்ரீபெட்டாலிங் பள்ளிவாசலில் நடத்தப்பட்ட தப்லிக் ஜமா மாநாட்டுடன் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என சுகாதார அமைச் சின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ டாக்டர் நோர்ஹிஷாம் அப்துல்லா அறிவித்துள் ளார்.

பகாங் மாநிலத்தின் ஜெரண்டூட் நகரில் உள்ள மதராசா அதில் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. இங்கிருந்து அதிகமானோர் ஸ்ரீபெட்டாலிங் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளது அமைச்சின் தீவிர ஆய்வுக்குப் பின்னர் தெரிய வந்துள்ளது.

அடுத்தது பினாங்கு மாநிலத்தின் பெனாந்தி மதராசா.

அதற்கு அடுத்ததாக சிலாங்கூர் மாநிலத்தின் சுங்கை லூய் மதராசா.

இறுதியாக உள்ளது மலாக்கா மாநிலத்தின் ஜாசின் மதராசா.

இந்த நான்கு மதராசாக்களைச் சார்ந்தவர்கள் மிகத் தீவிரமாக கண்காணிக்கப்படு கிறார்கள். ஜெரண்டூட் மதராசாவைச் சேர்ந்த 401 பேரின் மீதும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என நோர் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here