கோலாலம்பூர், ஏப்.13-
லெம்பா பந்தாய் நாடாளுமன்றத் தொகுதியில் 459 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டிலேயே மிக அதிகமான கொரோனா தொற்று உள்ள பகுதியாக லெம்பா பந்தாய் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலு லங்காட்(378), பெட்டாலிங்(335) ஆகிய தொகுதிகளும் அதிகமான கொரோனா தொற்று உள்ள பகுதிகளாக நீடித்து வருகின்றன.