பத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரனிடம் விசாரணை

கோலாலம்பூர்: தமது தொகுதியின் நிலவரங்களை அறிந்து கொள்ளும் பொருட்டு கோலாலம்பூர் பத்து தொகுதிக்கு உட்பட்ட செலாயாங் மொத்த சந்தைப் பகுதிக்குச்சென்ற பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் விசாரணைக்காக அழைக்கப்பட்டார்.  மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவித்திருக்கும் இப்பகுதிக்கு அவர் தம் மக்களைச் சநிதிக்கச்சென்ற போது கைது செய்யப்பட்டதாக  தகவல்கள் வெளியாகின.

காவல்துறையினரால் அழைக்கப்பட்ட பத்து எம்.பி.,

கடமையில் இருந்தபோது செலயாங் சந்தையில் எம்.சி.ஓவை மீறியதாக அவர் விசாரணைக்கு அழைத்ததாக  அவரின் உதவியாளர் கூறினார். பி.பிரபாகரன் இன்று செந்தூல் போலீசாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். மக்கள் நடமாட்டக் கட்டுபாட்டை  மீறியதாகக் கூறப்பட்டதாக அவரது உதவியாளர் விளக்கினார்.

பி.பிரபாகரன், தனது பேஸ்புக் பக்கத்தில், இன்று பிற்பகல் செந்தூல் மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு  சென்று கொண்டிருந்ததாக பிரபாகரன் கூறினார்.

இது ஒரு கைதுதானா என்று உறுதியாக தெரியவில்லை,” என்று அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here