காவல் துறையினருக்கு பாதுகாப்பு கவசங்களை வழங்கினார் விஷால்

நடிகர் விஷால் தன் அம்மாவின் தேவி அறக்கட்டளை மூலம் நலிவுற்ற நடிகர் சங்க உறுப்பினர்கள், நலிவுற்ற தயாரிப்பாளர்கள், நடிகர் நடிகைகளுக்கு பணி புரியும் உதவியாளர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் நிவாரண உதவிகள் வழங்கினார்.

தற்போது அண்ணாநகர் துணை ஆணையர் எஸ்.பி.முத்துசாமி IPS அவர்களிடத்தில் முகக்கவசம், கையுறைகள், சானிடைசர் உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்களை வழங்கி இருக்கிறார்.

பாதுகாப்பு கவசங்களை நடிகர்கள் சௌந்தர ராஜா, ஜீவா மற்றும் விஷாலின் மக்கள் நல இயக்கத்தின் செயலாளர் ஹரி கிருஷ்ணன் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் வழங்கினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here