குரள்வழி யாவும் குறள்வழி யாக
குழந்தாய் நீ பேசு!- தமிழ்க்
குரலே நீதான் குறள்தான் தந்தை
குலம்வா ழட்டும் செழிப்போடு!
அமுதே தமிழ்தான் அஃதே உயிராம்,
அன்னை அவள்மூச்சு!- மலர்க்
குமுதம் போலும் கைகூப் பிடுவாய்
குணமாய் தினம்போற்று!
வெல்லும் தமிழே வேலன் சூலம்,
வெல்லும்படி பேசு! – தமிழ்
உள்ளும் உன்னுள் உயர்ம ருந்தாகும்
உணர்வே நினைப்போடு!
உன்னை என்னை பெற்றவள் அன்னை,
உணர்ந்தே தமிழ்ப்பேசு!- தாய்,
முன்னவள் என்றே முதல்வணங் கிடுவாய்
முதன்மைப் பண்போடு!
தமிழை அருந்து தமிழே விருந்து
தமிழே மருந்தாகும்!- தினம்
தமிழ்தான் அனைத்தும் தகையாய் உயர்த்தும்
தமிழின் புகழ்பேசும்!
–வீர.கா. அருண்மொழித்தேவன்