பெட்டாலிங் ஜெயா: நாட்டில் பதிவான புதிய கோவிட் -19 தொற்று எண்ணிக்கை வெள்ளிக்கிழமை (மே 21) 6,000 க்கும் அதிகமாக உள்ளது.
ஒரு டூவிட்டர் அறிக்கையில் சுகாதார தலைமை இயக்குநர் டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா 6,493 தொற்று பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தம் இப்போது 498,795 ஆக உள்ளது. மீண்டும், சிலாங்கூரில் 2,163, கோலாலம்பூர் (641), சரவாக் (612) தொற்றுகள் பதிவாகியுள்ளன.