11 வயது மகளை பாலியல் தொந்தரவு செய்ததாக தந்தை மீது குற்றச்சாட்டு

ஷா ஆலம், (ஜூன் 22) :
தந்தை தனது 11 மகளை உடல் ரீதியாக தொந்தரவு செய்தார் என்று ஓட்டுநர் ஒருவரின் மேல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இன்று (ஜூன்22) செஷன்ஸ் நீதிமன்றத்தில் குறித்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. ஆனால் குற்றஞ்சாட்டப்பட்ட அச்சிறுமியின் தந்தை தான் குற்றவாளி அல்ல என்று கூறி குற்றத்தினை மறுத்து விசாரணை கோரியுள்ளார்.

இக்குற்றச்சாட்டு நீதிபதி ரோசிலா சாலே முன்னிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையான 45 வயதுடைய சந்தேக நபரிடம் வாசிக்கப்பட்டது , குற்றஞ்சாட்டப்பட்ட பின்னரே அவர் அதனை மறுத்து இந்த மனுவை அளித்தார்.

மே 26 அன்று இரவு 7.05 மணியளவில் ஷா ஆலமில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அவர் இந்தக் குற்றத்தைச் செய்ததாகக் கூறப்பட்டுள்ளது.

இவ்வழக்கு சிறுவர் சட்டம் 2001 இன் பிரிவு 31 (1) (அ) இன் கீழ் இந்த குற்றச்சாட்டு உருவாக்கப்பட்டுள்ளது, இது அதிகபட்சமாக RM50,000 அபராதம் அல்லது 20 ஆண்டுகளுக்கு மேற்படாத சிறைத்தண்டனை அல்லது குற்றம் நிரூபிக்கப்பட்டால் இரண்டையும் இது வழங்குகிறது.

வழக்கு விசாரணைக்கு துணை அரசு வக்கீல் நூருல் அதிகா அப்துல் கஃபர் ஆஜரானார். குற்றம் சாட்டப்பட்டவரது வழக்கறிஞராக ஷாலேஹுடின் சலாம் ஆஜரானார்.

மேலும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு நீதிமன்றம் RM10,000 ஜாமீன் வழங்கியது. வழக்கு ஆகஸ்ட்டு 11 இல் விசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here